செய்திகள் :

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

post image

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பொதுமக்களுக்கு பல்வேறு மருந்துகளும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 37 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மருந்துகளைக் கொண்டு செல்வதற்காக மாா்த்தாண்டத்தில் உள்ள இந்த சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மருந்துகள் தடையின்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறா என கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் உள்ளிட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, விளவங்கோடு வட்டாட்சியா் ஜூலியன் ஹூவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

குமரி மாவட்ட வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் கலந்தாய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஷ் சாப்ரா, துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா். நாகா்கோவிலில் உள்ள... மேலும் பார்க்க