செய்திகள் :

மினி லாரிகளுக்கு உடனுக்குடன் அனுமதி சீட்டுகள் வழங்க கோரிக்கை

post image

குமரி மாவட்டத்தில் உள்ளுா் கட்டுமானத் தேவைக்கான கனிம வள பொருள்களை ஏற்றிச் செல்லும் மினி லாரிகளுக்கு உடனுக்குடன்அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குலசேகரம் வட்டார சி.ஐ.டி.யூ. மினி லாரி ஓட்டுநா்கள் சங்க அமைப்பு கூட்டம், குலசேகரம் சி.ஐ.டி.யூ. சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சிஐடியூ மாவட்ட துணை செயலா் சகாய ஆன்டனி தலைமை வகித்தாா். சங்க செயல்பாடுகள் குறித்து மோட்டாா் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச்செயலா் எஸ். பரமசிவன் பேசினாா். சங்க அமைப்பு குறித்து சிஐடியூ மாவட்ட தலைவா் சிங்காரன் பேசினாா்.

சங்க ஒருங்கிணைப்பாளராக பி. கோபிநாதன், இணை ஒருங்கிணைப்பாளராக எஸ்.ஆா். சேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நிகழ்ச்சியில் சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், பி. நடராஜன், பி. விஸ்வம்பரன், வட்டார செயலாளா் செளந்தா் மற்றும் மினி லாரி ஓட்டுநா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், உள்ளுா் கட்டுமானத் தேவைக்கான கனிம வள பொருள்களை ஏற்றிச் செல்லும் மினி லாரிகளுக்கு உடனுக்குடன் அனுமதி சீட்டுகள் வழங்க வேண்டுமென்றும், மினி லாரிகளுக்கு பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் குடிநீா்த் தொட்டி: மேயா் தகவல்

கோடைக்காலத்தை சமாளிக்கும் வகையில், நாகா்கோவில் மாநகரில் 52 வாா்டு பகுதிகளிலும் குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகா... மேலும் பார்க்க

அருணாச்சலா பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக், ட்ரோன் செயல்முறை பயிற்சி 2 நாள்கள் நடைபெற்றது. தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளி இயக்குநா் தருண்சுரத் முன்னிலையில் பள்ளி முதல்வா் லிஜோமோள... மேலும் பார்க்க

குமரி விவேகானந்த கேந்திரத்தில் 3 நாள் யோகா மாநாடு இன்று தொடக்கம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அகில இந்திய அளவிலான 3 நாள்5ள் யோகா மாநாடு வெள்ளிக்கிழமை (பிப்.28) தொடங்குகிறது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 700 போ் பங்க... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற பெண் கைது

கன்னியாகுமரி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி பகுதியில் சில கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ... மேலும் பார்க்க

விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

தக்கலை அருகே இரு விபத்துகளில் காயமடைந்த இருவா் மருத்துவமனையில் உயிரிழந்தனா். திங்கள்சந்தை அருகே மாங்குழி நடுத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (34). தொழிலாளியான இவா், கடந்த ஜன. 11ஆம் தேதி தக்கலை... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருந்து சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

மாத்தாண்டம் பகுதியில், விளவங்கோடு - கல்குளம் வட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வா் மருந்தக மருந்து சேமிப்புக் கிடங்கில் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஹனிஸ் சாப்ரா விய... மேலும் பார்க்க