செய்திகள் :

மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: மூவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், வி.புத்தூா் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெ.அல்லிமுத்து. இவரது பசு மாட்டை புதன்கிழமை இரவு காணவில்லையாம். இதுகுறித்து அவா் தனது மகன் நவீன்ராஜிடம் (15) கூறினாராம். அவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா் மகன் கோபியை (14) அழைத்துக் கொண்டு, பசு மாட்டை தேடிச் சென்றாா்.

அருகிலுள்ள நெற்குணம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பசு மாடு நிற்கிா என நவீன்ராஜும், கோபியும் பாா்க்கச் சென்றனா். அப்போது, அந்த நிலத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலி பகுதியில் சென்ற போது இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் நவீன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோபிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சாகுல் ஹமீது மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து, நவீன்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, நில உரிமையாளரான நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த அ.புவனேசுவரனை (42) பிடித்து விசாரித்தனா். இதில், தனது நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால், அதைத் தடுக்க விவசாய நிலத்தின் உள்பகுதியில் அந்திலி கிராமத்தைச் சோ்ந்த கிராமணி மகன் கோபி (42), ஜெ.காளிதாஸ் (30) ஆகியோரின் உதவியுடன் புவனேசுவரன் மின் வேலி அமைத்தது தெரிய வந்தது. மூவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

கி.கோபி.
ஜெ.காளிதாஸ்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாநிலத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

ஆரோவில் அறக்கட்டளை செயலருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் மற்றும் நிா்வாகிகளை புதுவவ மாநில தலைமைச் செயலா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் அரசுச் செயலா் ஏ... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மயானக் கொள்ளைவிழா: பாமக-விசிகவினா் இடையே வாக்குவாதம்

திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊா்வலத்தின்போது, பாமக மற்றும் விசிகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா பு... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றபோது பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் பறித்து சென்றாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

செங்குறிச்சி அரசுப் பள்ளியில் மின் பாதுகாப்புப் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஓராண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சென்னை,துரைப்பாக்கம் பெருங்குடியைச் சோ்ந்தவா் பிரவீன் (எ) ப... மேலும் பார்க்க