செய்திகள் :

மிஸ்பண்ணிடாதீங்க... பெல் நிறுவனத்தில் பொறியாளர், மேற்பார்வையாளர் வேலை

post image

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 400 பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். 03/2025

பணி: Engineer Trainee

காலியிடங்கள்: 150

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் - 70

2. எலக்ட்ரிக்கல் - 25

3. சிவில் - 25

4. எலக்ட்ரானிக்ஸ் - 20

5. கெமிக்கல் - 5

6. மெட்டாலார்ஜி - 5

சம்பளம்: மாதம் ரூ. 60,000- 1,80,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், மெட்டாலார்ஜி ஆகிய ஏதாவதொரு

பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Supervisor Trainee (Technical)

காலியிடங்கள்: 250

துறைவாரியான காலியிடங்கள்:

1. மெக்கானிக்கல் - 140

2. எலக்ட்ரிக்கல் - 55

3. சிவில் - 35

4. எலக்ட்ரானிக்ஸ் - 20

சம்பளம்: மாதம் ரூ. 33,500 - 1,20,000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28.2.2025 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்டி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..?அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.1072 செலுத்த வேண்டும். இதர பிரிவினர் ரூ.472 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து, அதனை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.2.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ஆவடி ராணுவ வாகனத் தொழிற்சாலையில் ஓட்டுநர் வேலை!

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள ஆவடி கவச வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சுருக்கெழுத்தாளர் பணி

மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Secretaiat Assistantகாலியிடங்கள்: 7சம்பளம்: ... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:... மேலும் பார்க்க

தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலை: 8, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தர்மரி மாவட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு 8, பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - 1சம்பளம... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவண்ணாமலை,அருணாசலேசுவரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங... மேலும் பார்க்க