செய்திகள் :

மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!

post image

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.

வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் ஆணுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு மிஸ்டர் மனைவி தொடர் எடுக்கப்பட்டது.

தேப்ஜானி மொடாக்

இதையும் படிக்க: தமிழில் பேசிய கயாது லோஹர்..! ரசிகர்கள் உற்சாகம்!

பவன் - தேப்ஜானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்த இத்தொடர், கடந்த 2024 டிச. 22 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் பவன் - தேப்ஜானி ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். இத்தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த புதிய தொடரின் பூஜை இன்று(பிப். 27) நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் பெயர், ஒளிபரப்பு தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவன் ரவீந்திரா

புதிய தொடரில் மீண்டும் பவன் - தேப்ஜானி ஜோடியைக் காண அவர்களது ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை தேப்ஜானி மொடாக் ராசாத்தி தொடரின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர், வானத்தைப் போல உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் சீமான் வீட்டு காவலாளி துப்பாக்கியை நீட்டி காவல்துறையினரை மிரட்டியதால் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

கோயில்களின் நிர்வாகம், பராமரிப்பு செலவிற்கான அரசு மானியம் உயர்வு!

கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியத்திற்கான ரூ. 27 கோடிக்கான காசோலைகளை திருக்கோயில்களின் அறங்... மேலும் பார்க்க

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை(பிப். 28) சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவன... மேலும் பார்க்க

ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்ப... மேலும் பார்க்க

மறுகால் குறிச்சியில் சாலையில் உலவிய கரடி: மக்கள் அச்சம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மறுகால் குறிச்சியில் சாலையில் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிக்கு வியாழக்கிழமை வந்த கரடியால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.மேற்கு தொடர்ச்சி மலை வன... மேலும் பார்க்க

அயனாவரத்தில் ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை, பெண்ணின் மீது கொலை தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் எட்வீன். இவரது மகன... மேலும் பார்க்க