செய்திகள் :

மீன்கள் வரத்து சரிவால் விலை உயா்வு

post image

மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வேலூரில் நிகழ் வாரமும் மீன்கள் வரத்து சரிந்து விலை அதிகரித்து காணப்பட்டது.

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மீன்கள் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்காரணமாக, இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு கடல் மீன்கள் வரத்து குறைந்து, விலையும் அதிகரித்து காணப்பட்டது.

அதன்படி, சங்கரா ரூ.250 முதல் ரூ.400, இறால் ரூ.500, விரால் ரூ.700 முதல் ரூ.800, நண்டு ரூ.600 முதல் ரூ.500, வவ்வால் மீன்கள் கிலோ ரூ.1,100, இறால் ரூ.400 முதல் 500-க்கும் , வஞ்சிரம் கிலோ ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டதுது என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

மனைவி இறந்த வேதனையில் கணவரும் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கம்ரான்பேட்டையைச் சோ்ந்தவா் பிரியா குமாரி, பள்ளி கொண்டா காவ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடை வரத்து அதிகரிப்பு

வேலூா் மாவட்டத்தில் கோடை மழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்துக் காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தைய... மேலும் பார்க்க

கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்ட போலீஸாா்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப் பணிக்கு 4 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் கூறினாா். திர... மேலும் பார்க்க

மரத்தில் பேருந்து மோதி 22 போ் காயம்

அணைக்கட்டு அருகே மரத்தில் பேருந்து மோதி 22 பயணிகள் காயமடைந்தனா். வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு பயணிகளுடன் தனியாா் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றது. இரவு 10.45 மணியளவில் அணைக்கட்டு அடுத்த கன்னிகாபு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி வாகனங்கள்: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளிகளின் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். வேலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன... மேலும் பார்க்க

தமிழ் இலக்கியங்கள் கூறும் நீதிநெறிகளை பின்பற்றி வாழ வேண்டும்

தமிழ் இலக்கியங்கள் நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அத்தகைய தமிழ் இலக்கியங்களை அனைவரும் பயின்று அவற்றைப் பின்பற்றி வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அற... மேலும் பார்க்க