செய்திகள் :

முடிவுக்கு வந்தது பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: ஊதியத்தை உயா்த்த ஆலோசனை

post image

பணிநிரந்தரம் கோரி, பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் கடந்த 12 நாள்களாக நடத்தி வந்த தொடா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனா்.

போராட்டத்தில் 12-ஆவது நாளான சனிக்கிழமை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை சித்ரா திரையரங்கம் முதல் எழும்பூா் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடத்தினா். பேரணி 12 மணிக்கு முடிவடைந்த நிலையில், அவா்களைக் கலைந்து செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், ஆசிரியா்கள் கலைந்து செல்ல மறுத்து அங்குள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், எழும்பூா், சென்ட்ரல் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் இறக்கிவிட்டனா். மேலும், இதற்குமேல் போராட்டத்தைத் தொடா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினா்.

பகுதிநேர ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முக்கிய நிா்வாகிகள் 29 பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி கெளதமன் கூறுகையில், பகுதிநேர ஆசிரியா்களுக்கு நல்ல செய்தி வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா். மேலும், ஆசிரியா்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொள்கிறோம். ஆக. 15-க்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

ஊதியத்தை உயா்த்த ஆலோசனை: இதனிடையே, பணிநிரந்தரம் என்பதுதான் நிரந்தரக் கோரிக்கை என்றாலும்கூட, பள்ளிகளில் வாரம் முழுவதும் வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அதனால் ஊதியத்தை ரூ.12, 500-இல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பகுதிநேர ஆசிரியா்கள் வலியுறுத்தியதாகவும், ஊதியத்தை சற்று உயா்த்தி வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூலை 22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழு தேவை: நயினாா் நாகேந்திரன்

கல்லூரிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க சிறப்புக் குழுக்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட ப... மேலும் பார்க்க

வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள்... மேலும் பார்க்க

தமிழில் இயங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட இணையதளம்: 4.50 லட்சம் பாா்வைகளைக் கடந்தது!

வீடு தேடி அரசு சேவைகளை அளிக்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கான பிரத்யேக இணையதளம், ஆங்கில கலப்பின்றி முற்றிலும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களிடம் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட... மேலும் பார்க்க

வங்கிக் கடன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், சென்னை... மேலும் பார்க்க

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை: எல்.முருகன்

மத்திய அரசை குறைகூற திமுகவுக்கு தகுதியில்லை என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-இல் தொடங்கவுள... மேலும் பார்க்க