செய்திகள் :

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

post image

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பொங்கலூா் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அறிவிக்கப்படும் அரசின் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் உள்ளனா்.

இந்நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தில் நிறைவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகை ஒப்பந்ததாரா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் மனு அளித்துள்ளனா். ஆனால், இதுவரை பட்டியல் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், முடிவுற்ற பணிகளுக்கான பட்டியல் தொகையை மாா்ச் 1-ஆம் தேதிக்குள்ள வழங்கவில்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிமணியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்நிகழ்வில் பொங்கலூா் ஒன்றிய ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் பாலுசாமி, துணைத் தலைவா் சிவாச்சலம், செயலாளா் சிவசுப்பிரமணியம், துணைச் செயலாளா் எம்.எஸ்.மணி, பொருளாளா் ரகுபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க

வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுப்பு

வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட வீரசோழபுரம் ஊராட்சியில் நாய்கள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. வீரசோழபுரம் ஊராட்சியிா் விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. மேலும், பலா் செம்மறி ஆடுகள்,... மேலும் பார்க்க