செய்திகள் :

முதலீட்டாளர்கள் மாநாடு: ``இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80% நிறைவேறிவிட்டது'' - ஸ்டாலின்

post image

இன்று மதுரையில் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக, 'TN ரைஸிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில்' கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகிடும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்டாலின் - TRB ராஜா
ஸ்டாலின் - TRB ராஜா

இந்த மாநாட்டில் ஸ்டாலின், "நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நலிவுற்ற இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அவசரம் என்று புரிந்துகொண்டோம்.

அதற்காக ஆலோசனைகளை மேற்கொண்டோம். வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டுகளை ஈர்த்து வர பயணங்கள் மேற்கொண்டேன்.

ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட‌ நாடுகளுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களை தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய வைத்தோம்.

முகவரி

முதலீட்டாளர்களின் முதல் முகவரி 'தமிழ்நாடு' தான் என்கிற நிலையை உருவாக்கினோம்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ரைஸிங் என்கிற மாநாட்டை நடத்தி வருகிறோம்.

மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி, மாவட்டம் தோறும் பரவலான வளர்ச்சி என்று நாங்கள் கூறியதை எங்களின் செயல்கள் மூலம் நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.

ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.11 லட்சத்து 83 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு‌ வந்திருக்கிறோம். 34 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்திருக்கிறோம்.

மதுரை: TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு
மதுரை: TN Rising முதலீட்டாளர்கள் மாநாடு

நான் இல்லை

ஒப்பந்தம் போட்டு முடிந்ததும் வேலை முடிந்துவிட்டது என்று நினைப்பவனில்லை நான். ஒவ்வொரு துறைகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்வது என் வழக்கம்.

இதுவரை புரிந்துணர்வு போடப்பட்ட ஒப்பந்தங்களில் 80 விழுக்காடு நிறைவேறிவிட்டன. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலமும் இப்படியொரு முடிவை காட்டியதில்லை.

ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்பதில் நானும், அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் கண்ணும் கருத்துமாக இருப்போம்.

நேற்று முன்தினம் டி.ஆர்.பி ராஜா வியட்நாமிற்கு சென்று, மின்சார இருசக்கர வாகனங்கள், மின்சார பேருந்துகள் உற்பத்தி தொழிற்சாலையை தூத்துக்குடிக்கு கொண்டு வந்திருக்கிறார்.

முதலீடுகள் எளிதாக கிடைத்துவிடாது. மாநிலத்தின் கொள்கை, மனிதவள திறன், உட்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, நிர்வாகம், நீண்ட கால நிலைத்தன்மை பொறுத்தே முதலீடுகள்‌ ஒரு மாநிலத்திற்கு வரும். அப்படி யோசிக்கையில் முதலீட்டாளர்களுக்கு முதலில் நினைவு வருவது தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் தொழில் நகரமாக‌ மாற்றுவது என் ஆசை, என் லட்சியம்" என்று பேசியுள்ளார்.

"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

"ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள்" என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மதுர... மேலும் பார்க்க

”பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வேண்டும்”- தஞ்சாவூர், திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொ... மேலும் பார்க்க

``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமிழிசையின் கேள்விகள்

மதுரையில் இன்று நிகழ்ச்சியொன்றில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.மேலும், நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``கடந்த நான்கரை ஆண்ட... மேலும் பார்க்க

``அந்த பாச்சா எதுவும் பலிக்காது; இதுதான் எங்கள் அரசியல்'' - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இன்று மதுரையில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,"சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண்; வீரமிக்க பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த மண்; முக்கியமாக, ஆராய்ந்திடாமல் அவசர அவசரமாக தவற... மேலும் பார்க்க

``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய... மேலும் பார்க்க