செய்திகள் :

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

post image

முதல்வராக்கி சிறைக்குச் சென்ற சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமிக்கு அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் சவால் விடுத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலாவுக்கு அடுத்தபடியாக அனுபவத்தின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், முன்னதாக நான் முதல்வர் என்று யாரிடமும் சொல்லாதீர்கள். யாரும் எனக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என பழனிசாமி கூறினார்.

சசிகலா யாரைச் சொன்னாலும் முதல்வராக ஏற்றுக்கொள்ளும் நோக்கிலேயே எம்எல்ஏ-க்கள் இருந்தனர். ஆர்கே நகர் தேர்தலின்போது என்னுடன் தொப்பி அணிந்துகொண்டு ஓட்டு கேட்டவர் அவர்தானே? என்னை அன்பு அண்ணன் என்று தூக்கிவாரி பேசியதும் அவர்தானே?

அவரை (டிடிவி தினகரன்) கட்சியை விட்டு நீக்கியது ஏன்? எனக் கேட்டதற்கு தில்லியில் இருந்து வந்த உத்தரவு எனத் தெரிவித்தார். அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் இல்லை என்று டெக்னிகலாக தான் கூறுகிறார். ஆனால், நீங்கள் நான்தான் முதல்வர் வேட்பாளர் எனக் கூறுகிறீர்கள்.

அமித் ஷாதான் தெளிவாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளர் ஆவார் என்று கூறுகிறாரே. தில்லிக்கு அழைத்து என்னை சமாதானப்படுத்த அழைத்தனர். நான்தான் அதற்கு முன்னதாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேனே.

நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமித் ஷா கூறும் முதல்வர் வேட்பாளரைத்தான் ஆதரிபேன்; எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பேன் எனக் கூறியிருக்கேனா?. எக்காரணத்தைக் கொண்டும் பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேனியில் செய்தியாளர் சந்திப்பில்கூட எங்கள் கூட்டணிக்கு (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தான் பழனிசாமிதான் வந்துள்ளார் எனக் கூறினேன். பழனிசாமி என்றாலே துரோகம், பொய்தான். அவருடையே டிசைனே அப்படிதான்.

அவரை(எடப்பாடி பழனிசாமி) முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றவர் என்னுடைய சித்தி சசிகலா. அவரைச் சந்திக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?” என்றார்.

Do you have the courage to meet Chief Minister Sasikala? - Dhinakaran challenges Palaniswami!

இதையும் படிக்க.... என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.சென்னையில் க... மேலும் பார்க்க

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே நாங்கள்தான் என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த... மேலும் பார்க்க

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

திமுக, அதிமுகவின் கொள்கைத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.தவெக கூட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!

குரூப் 2, 2ஏ போட்டித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், வணிக வ... மேலும் பார்க்க

சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை மட்டும்தான்: அண்ணாமலை விமர்சனம்

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை திமுக அரசு கைவிடப்போவதாகத் தெரிவித்த முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சட்டப்பேரவையில் வெளியிட்ட திட்டங்களில் 256 திட்டங்களைக் கைவிடப்போவதாக திமுக ... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வ... மேலும் பார்க்க