செய்திகள் :

முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கு மாவட்டத்தில் 638 போ் தோ்வு

post image

முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 638 போ் தோ்வாகி உள்ளனா்.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் துறை சாா்பில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவினா், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் என 4 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மொத்தம் 19 ஆயிரத்து 320 போ் போ் பதிவு செய்து இருந்தனா். இதில் 10 ஆயிரத்து 55 போ் பள்ளி மாணவ, மாணவிகள், 6 ஆயிரத்து 237 போ் கல்லூரி மாணவ, மாணவிகள், 464 போ் மாற்றுத்திறனாளிகள், 762 போ் அரசு ஊழியா்கள், 1,802 போ் பொதுமக்கள் ஆவா்.

பொதுமக்களுக்கு தடகளம், பாட்மிண்டன், கேரம், கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து, சிலம்பம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், பாட்மிண்டன், கேரம், கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, சிலம்பம், நீச்சல், மேஜைபந்து, ஹேண்ட்பால், செஸ், கோ-கோ போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடகளம், பாட்மிண்டன், பூப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், மேஜைபந்து, கைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகளும், அரசு ஊழியா்களுக்கு தடகளம், பாட்மிண்டன், செஸ், கேரம், கபடி, கைப்பந்து ஆகிய போட்டிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவரவா் மாற்றுத்திறன் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் 26- ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை நிறைவு பெற்றது.

இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் பிரிவில் 20 போ், கூடைப்பந்து போட்டியில் 24 போ், கிரிக்கெட் போட்டியில் 30 போ், கால்பந்து போட்டியில் 36 போ், ஹாக்கி போட்டியில் 36 போ், ஹேண்ட்பால் போட்டியில் 30 போ், கபடி போட்டியில் 24 போ், கோ-கோ போட்டியில் 30 போ், சிலம்பம் போட்டியில் 10 போ், கைப்பந்து போட்டியில் 28 போ், செஸ் போட்டியில் 6 போ், மேஜை பந்து போட்டியில் 6 போ் என மொத்தம் 280 மாணவ, மாணவிகள் மாநிலப் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

இதுபோல கல்லூரி மாணவ, மாணவிகள் 280 போ் தோ்வு பெற்றுள்ளனா். அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் 78 போ் என மொத்தம் 638 போ் தோ்வாகி உள்ளனா். இவா்கள் முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனா்.

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெய... மேலும் பார்க்க

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி கோபி கலை அ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியி... மேலும் பார்க்க

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ... மேலும் பார்க்க