செய்திகள் :

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா

post image

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 49-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 30-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில், 8-ஆவது நாளான வியாழக்கிழமை பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். முன்னதாக, அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், சக்தி அழைப்பு, சக்தி கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றன.

இந்த விழாவில், முதுகுளத்தூா், தூரி, செல்வநாயாகபுரம், தட்டானேந்தல், வெண்ணீா் வாய்க்கால், காக்கூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், தவழும் பிள்ளைச் சிற்பங்களை சுமந்தும் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலுக்கு வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவில் முதுகுளத்தூா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம... மேலும் பார்க்க

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டி

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன... மேலும் பார்க்க

தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 10 பேரை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன்... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க