செய்திகள் :

முத்தூரில் 169 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

post image

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 169 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா். வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, மங்கலப்பட்டி வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.48.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முத்தூா் அத்தனூரம்மன், குப்பயண்ண சுவாமி கோயில் அலுவலகக் கட்டடம், முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். மேலும், சின்ன முத்தூா் செல்வக்குமார சுவாமி கோயில் தேரோட்டத்தையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்ந நிகழ்ச்சிகளில் கோயில் செயல் அலுவலா் ஜெ.சாந்தா, நாட்டராயன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.சந்திரசேகரன், காங்கயம் வட்டாட்சியா் மோகனன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க