செய்திகள் :

முத்தூரில் ரூ.80 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

post image

முத்தூரில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

முத்தூா் பேரூராட்சி தொட்டியபாளையத்தில் அயோத்தி தாசா் பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடம் அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சிக்கு முத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆல்பா்ட் தியாகராஜன் தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் க.ஈஸ்வரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய திட்டப் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இதில், முத்தூா் பேரூராட்சித் தலைவா் சுந்தராம்பாள், துணைத் தலைவா் மு.க.அப்பு, மாந்தபுரம் நாட்டராய சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க