செய்திகள் :

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !

post image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான லோனாவாலா பங்களா உள்ளது. இந்த பங்களாவில் மார்ச் 7 முதல் ஜூலை 18 ஆகிய இடைபட்ட தேதிகளில் நுழைந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருளைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பின்புற சுவரின் கம்பி வலையை வெட்டி பங்களாவுக்குள் நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் முதல் மாடி கேலரியில் ஏறி, ஜன்னல் கிரில்லை வலுக்கட்டாயமாக திறந்து பங்களாவுக்குள் நுழைந்தனர். அவர்கள், ரூ.50,000 ரொக்கம் மற்றும் சுமார் ரூ.7,000 மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றையும் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.57,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வீட்டிற்குள் இருந்த சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளரான 54 வயது முகமது முஜிப் கான் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் பரவலாக மழை!

சம்பாஜிநகரைச் சேர்ந்த கான், மார்ச் 7 முதல் ஜூலை 18, 2025 வரை பங்களாவில் யாரும் இல்லாத காலகட்டத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார். புகாரைத் தொடர்ந்து, லோனாவாலா கிராமப்புற போலீஸார், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்தை போலீஸார் ஆய்வு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் பொருள்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

The theft took place at their property located in Tikona Peth, Maval Taluka, Pune district, between March 7 and July 18, 2025, said a senior official from Pune Rural Police on Saturday.

மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சிறுமி உயிருக்கு போராட்டம்: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஒடிஸாவில் மர்ம நபர்களல் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமியைக் காப்பாற்ற தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. உயர்நிலை சிகிச்சைக்காக அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.ப... மேலும் பார்க்க

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேய... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க