செய்திகள் :

மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!

post image

மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா காவல் நிலையத்தில் 21 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணுக்குத் திருமணமான ஒருவருடன் தகாத உறவு இருந்தது. இது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால் அந்த நபர் மீது 21 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார்.

இது குறித்து விசாரிப்பதற்காக இரண்டு பேரையும் போலீஸார் வரவழைத்து இருந்தனர். அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். காவல் நிலையத்தில் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் ரஞ்சித் (41) தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அடுத்த நாள் வாக்குமூலம் கொடுக்க வரும்படி 21 வயது பெண்ணிடம் ரஞ்சித் கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்பெண் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் நயமாக பேசி அவரைக் காவல் நிலையத்திற்கு பின்புறம் இருந்த கான்ஸ்டபிள்கள் அறைக்கு, ரஞ்சித் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுக்க வந்தாரா அல்லது விசாரணை குறித்து தெரிந்துகொள்ள வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக தேஷ்முக் தெரிவித்தார்.

சம்பவம் நவம்பர் 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு காசா காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க

`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரி... மேலும் பார்க்க

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நட... மேலும் பார்க்க

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வை... மேலும் பார்க்க

திருப்பதி: `ரூ.100 கோடி காணிக்கையை திருடியது உண்மைதான்' - தேவஸ்தான கிளர்க் வாக்குமூலம்!

திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ரவிக்குமார். இவர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய மதிப்பில் 72,000 அமெரிக்க டாலரை திருட முயன்றபோது க... மேலும் பார்க்க