செய்திகள் :

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

post image

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணை ஒருவர் பிடித்து ரயில் தண்டவாளத்தில் தள்ளினார். அந்நேரம் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் ஒன்று அப்பெண் மீது மோதியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்பெண்ணும் அந்த நபரும் ரயில்வே பிளாட்பாரத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அந்தச் சண்டை முற்றியபோது கோபத்தில் அந்த நபர் அப்பெண்ணை தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளியதாகத் தெரிய வந்தது.

இதனை அருகில் உள்ள பிளாட்பாரத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி 5வது பிளாட்பாரத்த்தில் பெண் ஒருவரை, ஒருவர் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அப்பெண் தன்னை விடுவித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருந்தார்.

ஆனால் அந்த நபர் அப்பெண்ணைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொள்ள முயன்றார். இம்முயற்சி தோல்வி அடைந்ததால் கோபத்தில் பெண்ணை ரயிலில் தள்ளி கொலை செய்துள்ளார். அப்பெண் ரயிலில் அடிபட்டு இறந்தவுடன் அவரை ரயிலில் தள்ளி கொலை செய்த நபர் ரயில் தண்டவாளத்தில் நடந்து தப்பிச்செல்ல முயன்றார்.

அதற்குள் துப்புரவுத் தொழிலாளர் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ரயில்வே போலீஸாரை உஷார் படுத்தினர். ரயில்வே போலீஸார் அவரைப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ராஜன் என்று தெரிய வந்தது.

அதிகாலை நேரத்தில் தனியாக நடந்து வந்த பெண்ணை ரயில் நிலையத்திற்கு ராஜன் பின் தொடர்ந்து வந்துள்ளார். இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் கிடையாது. ஆனால் அப்பெண்ணைப் பின் தொடர்ந்து சென்று அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

கொலை
கொலை

அதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது. உயிரிழந்த பெண் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''ராஜனும், அப்பெண்ணும் ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்குள் வாக்குவாதமாக மாறியது. அந்நேரம் அப்பெண்ணைப் பிடித்து கீழே தள்ள ராஜன் முயன்றார்.

ஆனால் அப்பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பெண்ணை பிளாட்பாரம் ஓரத்திற்கு இழுத்துவந்து தண்டவாளத்தில் பிடித்துத் தள்ளிவிட்டார்'' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புக... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க

போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் அதிர்ச்சி

சட்டவிரோதக் காவலில் கைதியை சித்திரவதை செய்வதைப்போல வரதட்சணை கேட்டு மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்காரரின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரதட்சணை கொடுமைசாதாரண குடும்பம் முதல் வசதியான கு... மேலும் பார்க்க

'15 ஆண்டுகள்; 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கொலை...' - கர்நாடகா தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் வழக்கு

'2003-ம் ஆண்டு, எனது மகள் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலில் காணாமல் போனார். அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், என்னுடைய மகள் அடையாளம் கொண்ட பெண்ணை கோயில் ஊழியர்கள் தூக்கி சென்றதாக கூறினார்கள். இதை கோயில் நி... மேலும் பார்க்க

சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க