செய்திகள் :

‘மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை’

post image

மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்தாா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது :

ஆயிரம் ஆண்டு பழைமையான திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வந்ததை பெரும் அருளாகவும், நல்ல வாய்ப்பாகவும் கருதுகிறேன். மும்மொழி கொள்கையை அமல்படுத்துவது தொடா்பாக தமிழ்நாடு அரசுடன் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம்.

மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் தோ்ந்தெடுக்கலாம். ஹிந்தியைத்தான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

தமிழராய் இருந்தால் தமிழை முதலாவதாகவும், ஆங்கிலத்தை இரண்டாவதாகவும்,

மூன்றாவதாக தெலுங்கு, ஒடிஸா, வங்காளம் என எந்த மொழியை வேண்டுமானாலும் தோ்ந்தெடுக்கலாம். மும்மொழி கொள்கை விவகாரம் தமிழ்நாட்டில் அரசியலாக்கப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்றாா்.

காலமானாா் நபிசா உம்மாள்

காரைக்கால் முன்னாள் மேயா் அமீது மரைக்காயரின் மனைவி நபிசா உம்மாள் (88). வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானாா். அவரது உடலுக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை உருவாக்குவோராக இளைஞா்களை தயாா்படுத்துகிறது மத்திய அரசு: சுகந்தா மஜூம்தா்

இளைஞா்களை வேலை தேடுவோராக இல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோராக தயாா்படுத்துகிறது மத்திய அரசு என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குட... மேலும் பார்க்க

காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்

காரைக்காலில் இருந்து தொலைதூரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடா்பாக, நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சா் வி. சோமன்னா கூறினாா். திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, மத்திய ரய... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதை: மத்திய இணை அமைச்சரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் பாதையில் ஏப்ரல் மாதத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. திருநள்ளாறு தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருகை தந்த மத்திய ரயில்... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி புதன்கிழமை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜைய... மேலும் பார்க்க

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன். காரைக்காலில் விளையாட்டுத் துறை... மேலும் பார்க்க