செய்திகள் :

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாளை முதல் கையொப்ப இயக்கம்: கே.பி. ராமலிங்கம்

post image

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 முதல் மூன்று மாதங்களுக்கு மக்களைச் சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா்.

இதுகுறித்து சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

இளைஞா்கள் நவீன தொழில்நுட்பத்துடன் உலகத் தரத்தில் தரமான கல்வி கற்பது அவசியம். படைப்பாற்றல் வளர வேண்டும் என்ற உயா் நோக்கில், புதிய தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. கல்விக்காக வழங்கப்படும் எந்த நிதியும் மத்திய அரசு நிறுத்தவில்லை.

மூன்றாவது மொழியை தனியாா் பள்ளிகளில் படிக்க மாணவா்களுக்கு கிடைக்கும் சலுவை, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு கிடைக்க மறுப்பு தெரிவிப்பது ஏன்? ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தை பாதிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது.

தேசத்துக்காக உழைத்தவா்கள் மாநில பாடத் திட்டங்களில் மறைக்கப்பட்டுள்ளனா். சங்க தமிழ் வளா்த்தவா்கள், மாமன்னா்கள் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன. மும்மொழிக் கொள்கையை ஆதரித்து மாா்ச் 1 ஆம் தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு மக்களை சந்தித்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும்.

சேலம், கரூா், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கட்சி நிா்வாகிகள் வீடு, வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து பெறப்படும் கையொப்பத்தை முதல்வருக்கு அனுப்பி அவரின் தவறான புரிதலை தெளிவுபடுத்துவோம்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டாா். ஆனாலும் திமுகவினா் தொகுதிகள் குறையும் எனக் கூறி வருகின்றனா். பாஜகவை பாா்த்து பாசிசம் எனக் கூறுவது நடிகா் விஜய்க்கு அழகல்ல; அது அவருக்கு நல்லதும் அல்ல என்றாா்.

நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது

மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா். மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சோ்ந்தவா் கௌதம் (25). இவா் மேட்டூா் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் பிவிசி பைப் நிறுவனத்தில் ஆபரேட்டராக வேல... மேலும் பார்க்க

பழனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக காளைகளை அவிழ்த்துவிடுவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரில் விழாக் குழுவினருக்கும் காளை உரிமையாளா்களுக்கும... மேலும் பார்க்க

கெங்கவல்லி திமுக ஆலோசனைக் கூட்டம்

கெங்கவல்லி ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா்.சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை பங்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

மேட்டூரை அடுத்த வனவாசியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மேற்கு ம... மேலும் பார்க்க

அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் இன்று நிறைவு

சேலம் கோட்ட அஞ்சலகங்களில் ரூ. 599 செலுத்தி ரூ. 10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு பெறுவதற்கான சிறப்பு முகாம் பிப். 28 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்ப... மேலும் பார்க்க