செய்திகள் :

"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல்

post image

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத உதிரிப் பாகங்கள் சீனாவிலிருந்து வருகின்றன. மேக் இந்தியா என்ற பெயரில், நாம் ஒன்றுகூடி உற்பத்தி செய்கிறோமே தவிர உண்மையிலேயே தயாரிக்கப்படவில்லை. ஐபோன்கள் முதல் டிவி வரை தயாரிக்கத் தேவையான பாகங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.

சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்ளை இல்லாததும், அதிக வரிகளும், நாட்டின் தொழில்துறையை கார்போரெட் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது.

இந்தியா உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வரை வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் மேக் இன் இந்தியா பற்றிய பேச்சுகள் வெறும் பேச்சுகளாகவே இருக்கும். இந்தியா உண்மையான உற்பத்தி சக்தியாக மாறுவதற்குச் சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் அடிமட்ட அளவில் மாற்றம் தேவை.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது, மோடி அரசின் 'மேக் இன் இந்தியா' முயற்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கை மீட்டெடுக்கத் தவறிவிட்டது என்றும், இது 2014 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.3 சதவீதத்திலிருந்து 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவு என்றும் ராகுல் குற்றம் சாட்டினார்.

கடந்த பத்து ஆண்டுகளாக சீனா பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் ஆகியவற்றில் பணியாற்றி வருவதாகவும், இந்தத் துறையில் இந்தியாவை விட குறைந்தது பத்து ஆண்டுகள் முன்னிலை வகிப்பதாகவும் அவர் கூறினார். உலகம் தொழில்நுட்ப, பொருளாதார புரட்சியின் விளிம்பில் நிற்கும்போது, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் பங்கேற்புக்கான புதிய பார்வை இந்தியாவுக்குத் தேவை என்று அவர் கூறினார்.

Lok Sabha Rahul Gandhi on Saturday stated that India in the name of "Make in India" is merely assembling products and not truly manufacturing them.

இதையும் படிக்க:மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்

படேல் சமூகம் குறித்து சர்ச்சை கருத்து: மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

அகமதாபாத்: படேல் சமூகத்தைக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி ராஜ் தாக்கரே மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சர்... மேலும் பார்க்க

ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனை! இந்தியாவில் எங்கு அமைய உள்ளது?

ராஞ்சி: ஆசியாவிலேயே மிகப்பெரிய பன்னோக்கு மருத்துவமனையாக ’ரிம்ஸ்-2’ என்னும் திட்டம் அமையவுள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ‘ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனம்(ரிம்ஸ்-2)’ அமையவுள்ளது. ஆசியாவிலேய... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 9 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தமாகாளி படகுப் பாதையில் இருந... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து: என்ன நடந்தது தெரியுமா? - அமெரிக்க விசாரணை அமைப்பின் தகவல்கள்

அகமதாபாத் நகரில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்படலாம் என்று அமெரிக்காவை சேர்ந்த விமான விபத்து விசாரணை அமைப்பான ’என்.டி.எஸ்.பி.’ பதிவிட்டுள்ளது.அகமதாபாத்தில் கடந்த ஜூ... மேலும் பார்க்க

உ.பி.யில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபர்!

உத்தரப் பிரதேசத்தில் மதுபோதையில் உயிருள்ள பாம்பை விழுங்கிய நபரால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், பண்டாவில் அசோக்(35) என்பவர் மதுபோதையில், தனது வீட்டிற்குள் நுழைந்த உயிருள்ள பாம்பை விழுங்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து பெண் பலி !

ஜம்மு-காஷ்மீரில் கிராம பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஜம்மு-காஷ்மீரின் அரகம் கிராமத்தில் தனது வீட்டை விட்டு வெளியே ராகேஷ் குமாரின் மனைவி புஷ்பா தே... மேலும் பார்க்க