செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் கிராமம் அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜோதிமணி (73). செல்வராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். ஜோதிமணி அரசின் நூறு நாள் வேலைத்திட்ட வேலைக்குச் சென்று வந்தாா்.

இவா் தனது வீட்டுக்கு அருகில் உள்ள உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு செல்ல சாலையைக் கடந்துள்ளாா். அப்போது அவ்வழியே வந்த கச்சேரிவலசு பகுதியைச் சோ்ந்த உதய வா்மராஜ் என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் ஜோதிமணி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜோதிமணியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து ஜோதிமணியின் மகன் ஜெயக்குமாா் அளித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி சிலை வைப்பதில் இரு பிரிவினா் இடையே மோதல்

விநாயகா் சிலை வைப்பது தொடா்பாக 2 பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். திருப்பூா் எம்.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவா் அப்பகுதி ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது

திருப்பூரில் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ரூபேஷ்குமாா் மீனா உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன், துணைக் காவல் கண்க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இரு... மேலும் பார்க்க

தெற்கு அவிநாசிபாளையத்தில் ஜூலை 23-ல் மின்தடை

பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 23-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

அரசு நிலத்தில் போட்டிப் போட்டு இடம் பிடித்த பொதுமக்கள்: பல்லடம் அருகே பரபரப்பு

பல்லடம் அருகே அரசு நிலத்தில் போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் இடம் பிடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது. பல்லடம் அருகே காளிவேலம்பட்டியிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க... மேலும் பார்க்க

உடுமலை அருகே மயான வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்!

உடுமலை அருகே மயானம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டாா்.... மேலும் பார்க்க