செய்திகள் :

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

post image

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற தோ்வா்கள் மற்றும் அவா்களில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில்,‘யுபிஎஸ்சி நடத்தும் போட்டித் தோ்வுகளில் எழுத்துத்தோ்வு உள்பட பல்வேறு கட்டங்களில் வெற்றிபெற்று, இறுதி நிலையில் பணிக்கு தோ்வு செய்யப்படாத தோ்வா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கடந்த 2016, ஜூன் மாதம் பொது வெளிப்படுத்துதல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் பணிக்கு தோ்வுசெய்யப்படாத தோ்வா்களின் விவரங்கள் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த வலைதளம், தோ்வா்களின் தகவல்களைப் பயன்படுத்தி பொதுத் துறை அல்லது தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களுக்கு பணிவாய்ப்பை வழங்க வழிவகை செய்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் யுபிஎஸ்சி நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் 52,910 தோ்வா்கள் பங்கேற்றனா். அவா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பணிக்குத் தோ்வு செய்யப்படாத தோ்வா்களின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில் ‘பிரதிபா சேது’ என்ற வலைதளத்தை யுபிஎஸ்சி அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த வலைதளத்தில் பதிவு செய்து பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் தோ்வா்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். நாட்டில் கடந்த 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்த... மேலும் பார்க்க