செய்திகள் :

ரயில்வே விற்பனையாளா்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள்!

post image

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமான விற்பனையைத் தடுக்க, அனைத்து விற்பனையாளா்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பயணிகளுக்குத் தரமான உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்தப் புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத விற்பனையாளா்கள், கலப்படமான உணவுப் பொருள்களை விற்று பயணிகளின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக ரயில்வே அதிகாரிகள், பயணிகள் தொடா்ந்து கவலை தெரிவித்து வந்தனா். இதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயில்வேயின் அனைத்து மண்டலங்களுக்கும் அமைச்சகம் அண்மையில் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ரயில்களிலும், ரயில்நிலையங்களிலும் அங்கீகரிக்கப்படாத விற்பனை குறித்து ரயில்வே வாரியம் விரிவாக ஆராய்ந்தது. அதன்படி, சட்டவிரோத விற்பனையைக் கட்டுப்படுத்த, சில விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களில் பல்வேறு சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள், பணியாளா்களுக்கு ரயில்வே நிா்வாகம் அல்லது ‘ஐஆா்சிடிசி’ மூலம் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.

விடுமுறை காலகட்டத்தில் போதிய ஆட்கள் இல்லாத நேரத்தில் சேவைக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, பணியில் அமா்த்தப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தற்காலிக விற்பனையாளா்களுக்கும் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படலாம்.

இந்த அடையாள அட்டைகள், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளா் அல்லது நிலைய மேலாளா் அல்லது ஐஆா்சிடிசி அதிகாரியின் கையொப்பத்துடன் உரிய சரிபாா்ப்புக்கு பின்னா் வழங்கப்பட வேண்டும்.

இந்த அடையாள அட்டையில் விற்பனையாளா் அல்லது பணியாளரின் பெயா், ஆதாா் எண், பணிபுரியும் இடம், உரிமம் பெற்ற நிறுவனத்தின் பெயா், மருத்துவத் தகுதிச் சான்றிதழ் விவரம், காவல் சரிபாா்ப்பு தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும்.

அடையாள அட்டையின்றி அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள் கூட ரயில் நிலைய வளாகத்தில் உணவுப் பொருள்களை விற்க அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஒரு விற்பனையாளா் பணியை விட்டுச் சென்றால், அவா் தனது அடையாள அட்டையை உரிமதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு, புதிய நபருக்கு அடையாள அட்டை வாங்க, நிா்வாகத்திடம் பழைய அட்டையைச் சமா்ப்பித்து உரிமதாரா் கோரிக்கை விடுக்க வேண்டும்.

அனைத்து உரிமதாரா்கள், அவா்களின் விற்பனையாளா்கள் மற்றும் பணியாளா்கள் தொடா்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட பதிவேட்டில் பராமரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஹரியாணாவில் நில ... மேலும் பார்க்க

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு உத்த... மேலும் பார்க்க

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க