செய்திகள் :

ராணிப்பேட்டை புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்: ஆட்சியா் அழைப்பு

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 -ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப். 28) தொடங்கி, நடைபெறவுள்ள நிலையில் பங்கேற்று பயன் அடைய வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:.

ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் 10 நாள்களும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட நூல் அரங்கங்கள், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரியவகை நூல் தொகுப்புகள், தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள படைப்பாளிகளின் புத்தகங்களுடன், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்கள் பயனடையும் வகையான புத்தகங்களும், நுழைவுத் தோ்வு மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களும், சிறுவா்களுக்கான அறிவு சாா்ந்த புத்தகங்களும், மேலும் கலை, இலக்கியங்களும் மற்றும் பல்வேறு அரிய வகையான புத்தகங்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.

விழாவில், நாள்தோறும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரத நாட்டியப் பள்ளிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிா் சிறப்பு நிகழ்ச்சிகள், தலைசிறந்த பேச்சாளா்களின் சிந்தனை சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், நகைச்சுவை விருந்து, போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சியை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறாா். எனவே, கண்காட்சியில் ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா் பங்கேற்க வேண்டும் என்றாா்.

முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்: தொண்டா்கள் திரளாகப் பங்கேற்க அமைச்சா் காந்தி வலியுறுத்தல்

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை சென்னை ஓய்எம்சிஏ திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட திமுகவினா் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலரும், அமைச்ச... மேலும் பார்க்க

மயானக் கொள்ளை

அரக்கோணம் பழனிபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற அம்மன் வீதி உலா. மேலும் பார்க்க

ஆற்காட்டில் மயானக் கொள்ளை

ஆற்காட்டில் மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுகிறது. ஆற்காடு பாலாற்றில் நடைபெற்ற விழாவில் கிருஷ்ணாபுரம், இந்த... மேலும் பார்க்க

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் தொட்டாச்சாரியாா் உற்சவம் நிறைவு நாள் புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பக்தோசிப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சுவாமி, தொட்டாச்சார... மேலும் பார்க்க

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டத்தில் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு திமுக ,அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். மேல்விஷாரம் நகராட்சி சாதாரணக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூ... மேலும் பார்க்க

சிஐஎஸ்எஃப் மண்டலப் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்ய சோழன் பெயா்

அரக்கோணத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையம் இனி ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையம் என பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் மாற்றப்படுவதாக மத்திய அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க