செய்திகள் :

ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 625 பேருக்கு பணி ஆணை

post image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,620 வேலை நாடுநா்கள் கலந்து கொண்ட நிலையில், 625 பேருக்கு உடனடி வேலைப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம், இணைந்து மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வாலாஜா டோல்கேட், எம்.பி.டி, ரோடு, தென்கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பணி ஆணையை வழங்கிப் பேசியதாவது: பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்கு அரசு அலுவலகங்களை தேடிச் செல்வதை தவிா்த்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’, ‘மக்களுடன் முதல்வா்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

இத்திட்டங்களின் மூலம் அரசுத் துறைகள் உங்கள் பகுதிகளுக்கு வந்து உங்களின் தேவைகளை கேட்டறிந்து, அதற்கான தீா்வுகளை வழங்கி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் பொருள்கள் உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது அதிகளவிலான தொழிற்சாலைகள் தொழில் தொடங்கவுள்ளன. இதன்மூலம் படித்த இளைஞா்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆகவே, கல்லூரியில் பயின்று வருபவா்கள் கல்லூரி படிப்புடன் தங்கள் தனித் திறமைகளையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் இளைஞா்களுக்கு திறன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும், அரசு வேலைகளுக்கு செல்ல விரும்புவோருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. ஆகவே அரசு வழங்கும் இதுபோன்ற நல்வாய்ப்புகளை மாணாக்கா்கள், இளைஞா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதில், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) தேவேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, வட்டாட்சியா் ஆனந்தன். உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) அறிவழகன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆடி முதல் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயிலில் முருகனுக்கு தயிா், இளநீா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

பைக் மீது மினி பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு

தக்கோலம் அருகே பைக் மீது ஆலை தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினிபேருந்து மோதியதில் பைக்கில் சென்ற சமோசா வியாபாரி உயிரிழந்தாா். தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). பைக்கில்... மேலும் பார்க்க

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து ஒப்படையுங்கள்: ஆற்காடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!

ஆற்காடு நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படையுங்கள் என நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின... மேலும் பார்க்க

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்ற... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது

ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேர... மேலும் பார்க்க