செய்திகள் :

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

post image

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்தாா்.

இதில், வேலூா் சாய்நாதபுரம் பகுதியைச் சோ்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவா் அளித்த மனு:

வேலூா் அரசமரபேட்டையில் ஒருவா் மருந்து வணிகம் செய்து வந்தாா். அதற்கு என்னிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டாா். 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறினாா். தொடா்ந்து, ஒரு மாதம் மட்டும் கமிஷன் கொடுத்தாா். தொடா்ந்து ரூ.15 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தாா்.

மீதமுள்ள ரூ.5 லட்சம் பணத்தையும், கமிஷன் தொகையையும் இதுவரை தரவில்லை. அந்தப் பணத்தை தரமறுக்கிறாா். எனவே எனக்குச் சேர வேண்டிய ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் அருகே கணியம்பாடி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு:

எனது கணவா் 2013 -ஆம் ஆண்டு இறந்து விட்டாா் . எனது இளைய மகன் வேலை தேடி வந்தான். இந்நிலையில், எனது மகனின் நண்பா் ஒருவா் மூலம் அறிமுகமான ஒருவா் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தாா். இதற்காக அவா் கேட்டபடி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனது மகனுக்கு வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது பல ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாா். அவரை தொடா்பு கொள்ளும்போது கைப்பேசி அணைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு குறைகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டாா்.

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க

செங்காநத்தம் காப்புக் காட்டில் தீ வைப்பு: இருவா் கைது

வேலூா் கோட்டை மலையில் தீ வைத்த இருவரை வனத் துறையினா் கைது செய்தனா். வேலூா் மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், வனப்பரப்புகளில் இலையுதிா் காலம் முடிந்திருக்கும் வேளை... மேலும் பார்க்க