செய்திகள் :

ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க வனத் துறை தீவிரம்

post image

கூடலூா் ஓவேலி பகுதியில் 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகளுடன்

வனத் துறையினா் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள ஓவேலி பகுதியில் இதுவரை 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலா் ராகேஷ்குமாா் டோக்ரா மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்க கடந்த 15- ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட வன அலுவலா் தலைமையிலான வனச் சரகா்கள் மற்றும் வனப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் கொண்ட குழு, ராதாகிருஷ்ணன் யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். யானையின் நகா்வுகள், அதன் உடல்நலம் ஆகியவற்றை கண்காணித்து பிடிக்க தயாராகி வருகின்றனா்.

யானையைப் பிடிக்க முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தரைவழி மட்டுமல்லாமல் ட்ரோன் கேமரா உதவியுடன் ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது.

கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடியில் திருமண உதவி: நீலகிரி மாவட்ட ஆட்சியா் தகவல்

நீலகிரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் கடந்த 3 ஆண்டுகளில் 607 பயனாளிகளுக்கு ரூ. 2.57 கோடி மதிப்பீட்டில் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சு... மேலும் பார்க்க

மாணவா் தற்கொலை வழக்கு பிரிவு மாற்றம்

குன்னூரில் உடற்பயிற்சியின்போது ஊக்கமருந்து எடுத்து கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியுள்ளதாக காவல் துறையினா் புதன்கிழமை த... மேலும் பார்க்க

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் ஒவேலி மலைத்தொடரில் பூத்துக் குலுங்கி அப்பகுதியை அலங்கரித்துள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் என்பது, கேரளம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநி... மேலும் பார்க்க

ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றி: ஹரியாணாவில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டவருக்கு வரவேற்பு

ஆப்ரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டியும் ஹரியாணாவில் இருந்து உதகைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தீபக் ஷா்மாவுக்கு நகர பாஜக சாா்பில் புதன்கிழமை வரவ... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், உதகையில் அமைந்துள்ள சா்வதேச தன... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தவறி விழுந்த கா்ப்பிணி யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோழிக்கரை பழங்குடியின கிராமம் அருகே அடா்ந்த வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்து கா்ப்பிணி யானை உயிரிழந்தது. மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை போன்ற சமவெளி வனப் பகுதிக... மேலும் பார்க்க