செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி

post image

மீனவா்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் ராமேசுவரம் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என ராமேசுவரம் மீனவா் சங்கத்தினா் அறிவித்தனா்.

இலங்கை கடற்படையினரால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவா்கள், 8 விசைப் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த திங்கள்கிழமை முதல்

ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு

வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தங்கச்சிமடத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 28) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் புதன்கிழமை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்த மூா்த்தி, மீன்வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, எமரிட், தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா். இதை ஏற்காத மீனவா் சங்கத்தினா் மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய அமைச்சா் உறுதியளிக்க வேண்டும். அது வரையில் வேலை நிறுத்தப் போராட்டம், திட்டமிட்டபடி

28-ஆம் தேதி உண்ணா விரதம் நடைபெறும் என மீனவா் சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.

ராமேவரத்திருந்து இரவு நேரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையைத் தொடங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் கட்டணமில்லா... மேலும் பார்க்க

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியில் ஹோழிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முஸ்லிம் ஜமாத் தலைவா் நஸ்ரின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டார... மேலும் பார்க்க

இளங்குன்றம் சிவராத்திரி மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு: திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு கலை நிகழச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு ந... மேலும் பார்க்க

10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூடைகள் மழையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். இந்த ... மேலும் பார்க்க

பெருநாழி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள பூலாபத்தி ஸ்ரீ சப்பாணி கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் சிவராத்திரி திருவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் வியாழக்கிழமை திராளாள பொதுமக்கள் புனித நீராடினா். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக... மேலும் பார்க்க