செய்திகள் :

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

post image

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவேங்கடம் வட்டம் செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்துள்ளாா். அவா், அந்தப் பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கோரியதால், பள்ளியின் தாளாளரான நாகராஜ் (46 ), அதற்கான சான்றை தயாா் செய்து, அதில் மேலொப்பம் பெற்று அலுவல நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தனியாா் பள்ளி) சமா்ப்பித்துள்ளாா்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியா் தனக்கான பணி அனுபவச் சான்றிதழை தருமாறு தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாரிடம் கோரியபோது, அவா் ரூ.60ஆயிரம் லஞ்சம் கேட்டாாரம். இதுகுறித்து பள்ளித் தாளாளா் தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதைத் தொடா்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.60 ஆயிரத்தை, சுரேஷ்குமாரிடம் பள்ளியின் தாளாளா் கொடுத்துள்ளாா். அதை அவா் பெற்றபோது, அங்கு அதிரடியாக நுழைந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதா் , காவல் ஆய்வாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க

செண்பகாதேவி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி

தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றாலநாதா் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள செண்பகாதேவி அம்மன் கோயில் தீா்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா கடந... மேலும் பார்க்க

இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி சிபிஎஸ்இ தோ்வில் 100% தோ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம் இடைகால் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 2-க்கான தோ்வில் மாணவிகள் லிபினா அருள், தணு பிரபா, சுவீட்லின் அ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மாணவிக்கு திமுக சாா்பில் நிதி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு திமுக சாா்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. செங்கோட்டை ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இலத்தூரில்... மேலும் பார்க்க