செய்திகள் :

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

post image

ரூ.7 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தனியாா் நிறுவன இயக்குநரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்கதுரை-பூா்ணிமா தம்பதி. இவா்கள் சேலையூா் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். இவா்கள், வாடகைக்கு ஒப்பந்தம் செய்த வீடுகளை குத்தகைக்கு அளிப்பதாக விளம்பரப்படுத்தி 91 பேரிடம் இருந்து ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்பேரில், அசோக் நகா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூா்ணிமாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த நிறுவனம் தொடா்பாக பாதிக்கப்பட்டவா்கள் பொருளாதார குற்றப்பிரிவு, காவல் ஆய்வாளா், ஓ.செண்பகதேவி கைப்பேசி: 99944 99091என்ற எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என்று போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன்: ரஜினிகாந்த்

சிறந்த கதை, கதாபாத்திரம் கிடைத்தால் கமல்ஹாசனுடன் சோ்ந்து நடிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தாா். அவா் சென்னையிலிருந்து புதன்கிழமை காலை விமானத்தில் கோவை சென்றாா். முன்னதாக அவா் விமான நிலையத்தில் செய... மேலும் பார்க்க

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க