தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது
திருப்பூரில் ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ரூபேஷ்குமாா் மீனா உத்தரவின்படி, காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன், துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன் ஆகியோா் மேற்பாா்வையில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே காளிபாளையம் - மதுகாம்பாளையம் சாலை, ஏரிக்காடு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ஆய்வாளா் ராஜசேகரன், உதவி ஆய்வாளா் பிரியதா்ஷினி உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அங்கிருந்தவரிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தாராபுரம், நேரு நகா் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (21) என்பது தெரியவந்தது.
அவா் ராம்மூா்த்தி நகா், காந்திஜி நகா், இடையன்கிணறு போன்ற பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை பெற்று வெளிமாநில தொழிலாளா்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து போலீஸாா் 1350 கிலோ அரிசி, காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து சுதாகரைக் கைது செய்தனா்.