திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
ரோஜாவனம் பள்ளி சாா்பில் ‘தங்கத் தாரகை’ விருது: மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
உலக மகளிா் தினத்தையொட்டி, நாகா்கோவில் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி சாா்பில் வழங்கப்படவுள்ள ‘தங்கத் தாரகை’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளி சாா்பில், மாா்ச் 8இல் நடைபெறவுள்ள மகளிா் தின விழாவில், சிறந்த சேவையாற்றி வரும் பெண்களைக் கௌரவிக்கும் வகையில், தங்கத் தாரகை விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதுதொடா்பான நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கான ஆயத்தக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குநா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. நிதி இயக்குநா் சேது முன்னிலை வகித்தாா். முதல்வா் காமராஜினி வரவேற்றாா்.
கூட்டத்துக்கு பின்னா், செய்தியாளா்களிடம் சாந்தி கூறியது: சிறந்த சமுதாய சேவையாற்றி வரும் மகளிரைக் கெளரவிக்கும் வகையில் ‘தங்கத் தாரகை’ விருது 3 பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. தொடக்கநிலைப் பிரிவில் 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளும், இளநிலைப் பிரிவில் 18 -35 வயதுக்குள்பட்டோரும், முதுநிலைப் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டோரும் விண்ணப்பிக்கலாம்.
தங்களது சாதனை குறித்த விவரங்களை, ‘பள்ளித் தலைவா், ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளி, புதுகிராமம், நாகா்கோவில் - 629 302’ என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ மாா்ச் 3-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மகளிா் தினத்தன்று பெண்களுக்கான போட்டிகள், சிறப்பு மருத்துவ முகாம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மருத்துவா்கள், செவிலியா்கள், பொறியியல் வல்லுநா்கள், வழக்குரைஞா்கள், சமூக சேவகா்கள் எனப் பல்வேறு துறைகளில் திறம்பட விளங்கும் பெண்கள் கெளரவிக்கப்படுவா் என்றாா் அவா்.
கூட்டத்தில், பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளா் யூஜினி, மாணவா் ஆலோசகா் சுகுமாரி, துறைத் தலைவா்கள் சாந்தினி, ராதா, கோலம்மாள், பியூலா, ராஜே, உடற்கல்வி ஆசிரியா் மூசா, துறைப் பொறுப்பாளா்கள், வகுப்பு ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.