செய்திகள் :

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

post image

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் என்று அந்தக் கோயில் நிா்வாகிகளில் ஒருவரான ரத்தினபுரியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (52) இந்து சமய அறநிலையத் துறையில் மனு அளித்திருந்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடா்பாக சுரேஷ்குமாா் மனு அளித்திருந்தாா். இதையடுத்து, கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இந்திரா ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இது குறித்து ஊழல் தடுப்புப் பிரிவில் சுரேஷ்குமாா் புகாா் அளித்தாா். அவா்களது அறிவுரையின்படி, கடந்த வியாழக்கிழமை இரவு இந்திராவிடம், சுரேஷ்குமாா் பணம் கொடுத்துள்ளாா்.

அப்போது, இந்திராவைக் கைது செய்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இந்திராவை பணியிடை நீக்கம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஓரிரு நாள்களில் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, ... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் ... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக சாரல் மழை

கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டத... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.புலியகுளம் பண்ணாரியம்மன். ஆடி மாதத்தில் அம்மனுக்... மேலும் பார்க்க