வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
வடகொரியா நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
வடகொரியாவில் ஏற்படும் எந்தவொரு நிகழ்வும் வெளி உலகத்துக்கு தெரியாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
இதையும் படிக்க : எம்ஹெச்370 விமானம்: மீண்டும் தொடங்கிய தேடுதல் வேட்டை
இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மீண்டும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால், சுற்றுலா வருபவர்களுடன் உள்ளூர் வழிகாட்டி இருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு ரஷியாவின் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு வடகொரியா அனுமதி அளித்தது. தொடர்ந்து, சீனாவின் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தாண்டு அனுமதி அளித்துள்ளது.
கரோனாவுக்கு முன்பு வடகொரியாவுக்கு சுற்றுலா வருபவர்களில் 90 சதவிகிதம் பேர் சீன நாட்டினராக இருந்தனர். ஆண்டுக்கு 3 லட்சம் சீனர்கள் வடகொரியா நாட்டுக்கு சுற்றுலா சென்றது குறிப்பிடத்தக்கது.