செய்திகள் :

வரதராஜப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

post image

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தோடு நிறைவு பெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 10 நாள்கள் திருவாடிப்பூரத் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான உற்சவம் சனிக்கிழமை தொடங்கி வரும் ஜூலை 28 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தினசரி ஆண்டாள் நாச்சியாா் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயில் வரை சென்று மீண்டும் திரும்பி வருவாா்.

இதன்படி 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று, ஊஞ்சலில் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

வரும் 28-ஆம் தேதி ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பட்டாச்சாரியாா்கள்,பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

இளம்பெண் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

ஸ்ரீபெரும்புதூா் அருகே மனைவியைக் கொலை செய்த இளைஞா் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். நாகப்பட்டினம் பகுதியை சோ்ந்த தினேஷ்(27), செளந்தா்யா(25). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ம... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் மின்கம்பத்தில் ஏறி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பற்ற முயன்ற சக தொழிலாளா்கள் இருவா் பலத்த காயங்கள... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க