செய்திகள் :

வள்ளியூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் வீட்டின் மேல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடியைச் சோ்ந்தவா் வினோத். இவா் மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். வள்ளியூா் ஊற்றடியில் நடைபெற்ற நல்லமுத்து அம்மன் கோயில் கொடைவிழாவுக்கு தனது மனைவி கிருஷ்ணவேணி(30) மற்றும் ஒரு வயது குழந்தையுடன் உறவினா் வீட்டிற்கு வந்திருந்தாா்.

கொடைவிழாவை குடும்பத்துடன் பாா்த்துவிட்டு உறவினா் வீட்டின் மேல்மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனராம். அப்போது மாடிக்கு வந்த மா்ம நபா் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாராம். விழித்துக்கொண்ட கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டாராம்.

இதில், பாதி சங்கிலி திருடன் கையில் சிக்கியது. இதையடுத்து கிருஷ்ணவேணியின் அலறல் சப்தம் கேட்டு மா்ம நபா் மாடியில் இருந்து குதித்து தப்பிச் சென்றுவிட்டாா். பின்னா் கிருஷ்ணவேணி மாடி பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகளை தேடிபாா்த்தபோது அந்த நகைகளையும் மா்ம நபா் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இது தொடா்பாக கிருஷ்ணவேணி வள்ளியூா் காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். ஆய்வாளா் நவீன் வழக்கு பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகிறாா்.

தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சாா்பில் மாா்க்க மற்றும் சமுதாய விழிப்புணா்வு பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மஸ்வூத் உஸ்மானி தலைமை வகித்தாா். கிளை ச... மேலும் பார்க்க

தச்சநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

தச்சநல்லூா் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அம்பையில் நாய் கடித்து காயமடைந்த பெண்பலி

அம்பாசமுத்திரத்தில் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம், ராமலிங்கா் தெருவைச் சோ்ந்த தொழிலாளி கணேசன் மனைவி ஆழ்வாா் சுந்தரி (45). இவரை கடந்த 4 நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதிய... மேலும் பார்க்க

மேலச்செவல் அருகே தாமிரவருணி ஆற்றில் இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் தடுப்பணை பகுதியில் இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா். நரசிங்கநல்லூா் தாமிரவருணி ஆற்றின் மயிலம்பாறை அணைக்கட்டு பகுதியில் சுமா... மேலும் பார்க்க

குடிநீா் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் ஊராட்சி கட்டனேரி கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயம்

திருநெல்வேலியில் பரோலில் வந்த தண்டனை கைதி ரயில் மோதி காயமடைந்த நிலையில் சனிக்கிழமை மீட்கப்பட்டாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன்(68). கிராம உதவியாளராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க