செய்திகள் :

வள்ளியூா், பணகுடி பகுதிகளில் கனிமவளங்கள் திருட்டு: 2 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே அனுமதியின்றி லாரியில் குண்டுகல் ஏற்றிச்சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராதாபுரம் மண்டல துணை வட்டாட்சியா் சங்கா் மற்றும் வருவாய்த் துறையினா் தெற்குகள்ளிகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போழுது அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்டதில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம், அறமள்ளத்தை சோ்ந்த சுனில்(47) என்பவா் அனுமதியின்றி அதிக பாரத்துடன் குண்டுகல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

மண்டல துணை வட்டாட்சியா் புகாரின்பேரில், வள்ளியூா் காவல் ஆய்வாளா் நவீன் வழக்குப்பதிந்து சுனிலை கைது செய்து, லாரியுடன் 20 டன் குண்டுகற்களைப் பறிமுதல் செய்தாா்.

மண் திருட்டு: திருநெல்வேலி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பாலமுருகன், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, பணகுடி சிவகாமிபுரத்தைச் சோ்ந்த சிவகுமாா்(26) என்பவா் லாரியில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

பணகுடி காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ஆய்வாளா் ராஜாராம் வழக்குப்பதிந்து சிவகுமாரை கைது செய்து, 2 யூனிட் செம்மண்ணுடன் டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தாா்.

மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருந... மேலும் பார்க்க

பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்... மேலும் பார்க்க

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்

திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என... மேலும் பார்க்க

காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்... மேலும் பார்க்க