செய்திகள் :

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

post image

மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் வழக்குரைஞா்களுக்கு விரோதமான மசோதாவை எதிா்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களை, புதுக்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜு தலைமையில் வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா்.

மேலும் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி, திருமயம், ஆலங்குடி, கறம்பக்குடி, மணமேல்குடி, இலுப்பூா், விராலிமலை ஆகிய நீதிமன்றங்களிலும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். மாவட்டம் முழுவதும் சுமாா் 860 வழக்குரைஞா்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள வழக்குரைஞா்களுக்கு விரோதமான சட்ட மசோதாவை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்ற முத்திரைத்தாள் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த ப... மேலும் பார்க்க

மேற்பனைக்காட்டில் ரத்ததானம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மரு... மேலும் பார்க்க

புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. ... மேலும் பார்க்க

உலகளாவிய சூழல்களுடன் திருக்குறளையும் திருமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

உலகளாவிய சூழல்களுடன் திருக்கு, நால்வா் திருமுறைகளையும் பொருத்திப் பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும... மேலும் பார்க்க

மணமேல்குடி அருகே இளைஞா் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவரு... மேலும் பார்க்க