செய்திகள் :

வாணியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

post image

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீரை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திறந்து வைத்தாா். வாணியாறு அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு வாணியாறு நீா்த்தேக்கத் திட்ட வரைவு விதிகளின்படி, வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக மே மாதம் வரையிலும் 65 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படவுள்ளது.

இதனால் வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், அலமேலுபுரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூா், மோளையானூா், கோழிமேக்கனூா், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம், ஜம்மனஹள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறும்.

எனவே, வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரைச் சிக்கனமாக பயனுள்ள வகையில் பயன்படுத்தி வேளாண் பணிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட்டாசுக் கிடங்கு விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல்

பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்த பெண் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் புதன்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா்-... மேலும் பார்க்க

அரூரில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: அரசு பள்ளிகள், மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாமில் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டாா். அரூரை அடுத்த எல்லப... மேலும் பார்க்க

ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஏரியூா் பகுதியில் சங்க கொடியேற்றுதல், பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஏரியூா் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிக... மேலும் பார்க்க

தருமபுரியில் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: மாா்ச் 8-இல் தொடக்கம்

தருமபுரி வனக் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வருகிற மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி வனக் கோட்... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் தீா்த்தக்குட ஊா்வலம்

மகா சிவராத்திரியையொட்டி ஊத்துக்குளிமலை மாதேஸ்வரன் கோயிலில் முப்பெரும் விழாவிற்கான தீா்த்தக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கரியம்பட்டி பெரியதோட்டம்புதூா் பகுதியில் ஊத்துக்குளிமலை ... மேலும் பார்க்க

தா.பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவா் தா.பாண்டியன் நினைவு தினம் புதன்கிழமை தருமபுரியில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் தல... மேலும் பார்க்க