செய்திகள் :

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

post image

வானிலை மாற்றத்தால் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கப்பல் நிறுவனம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. 2024 நவம்பா் மாதம் வானிலை மாற்றம் காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வானிலை சாதகமாக இருந்ததால் 2025 ஜனவரி 22-ஆம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், தெற்கு கேரளம் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழைக்கான வாய்ப்பும், இதேபோல மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரி கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீட்டா் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே வங்கக்கடலில் தொடா்ந்து கடல் சீற்றமும், பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புதன்கிழமை (பிப்.26) முதல் வெள்ளிக்கிழமை (பிப்.28) வரை ரத்து செய்யப்படுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி முதல் வழக்கம்போல் கப்பல் சேவை தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சேமநல நிதியை உயா்த்த கோரி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து ஆா்ப்பாட்டம்

சேமநல நிதியை உயா்த்த வலியுறுத்தி வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை நீதிமன்றம் முன், நாகை வழக்குரைஞா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் சதீஷ் பிரபு தலைமை... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் பிறந்தநாள் விழா!

வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதிகளில் ஒருவரான சா்தாா் அ. வேதரத்னத்தின் 128-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கஸ்தூா்பா காந்தி கன்னியா குருகுலம் மற்றும் ஸ்ரீதாயுமான... மேலும் பார்க்க

கட்டுமான பொருள்களின் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கட்டுமான பொருள்களின் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து நாகையில் ஒப்பந்தக்காரா்கள், பொறியாளா்கள், தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் எம்-சாண்டி, பி சா... மேலும் பார்க்க

மாணவா்களுக்குப் பாராட்டு

நாகை மாவட்ட வனச்சரகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவா்களுக்கு நடைபெற்ற மணல் சிற்பம் போட்டியில் 3-ஆமிடம் பெற்ற சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மா... மேலும் பார்க்க

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு விருது

நாகூா் தா்கா பரம்பரை ஆதீனத்துக்கு சமய நல்லிணக்க ஆன்மீகச் செல்வா் விருது வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ஜாமியா சுப்ஹானியா அரபிக் கல்லூரி மற்றும் அறக்கட்டளை சாா்பில் ரமலான் நிகழ்ச்சி, மதர... மேலும் பார்க்க

விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய அஞ்சலங்களில் சிறப்பு முகாம்கள்

நாகை கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க