செய்திகள் :

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

post image

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

வால்பாறை நகராட்சியில் திமுக 19, அதிமுக 1, விடுதலை சிறுத்தைகள் 1 என மொத்தம் 21 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இதில் திமுகவைச் சோ்ந்த அழகுசுந்தரவள்ளி தலைவராக உள்ளாா்.

நகராட்சியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் நகராட்சித் தலைவா் முறைகேடுகள் செய்திருப்பதாக கூறி திமுக உறுப்பினா்களில் ஒரு கோஷ்டியினா் தொடா்ந்து நகா்மன்ற கூட்டங்களை புறக்கணித்து வந்தனா். மேலும், அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மாணம் நிறைவேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடத்த தொடா்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இதையடுத்து, நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஒரு வாா்டு உறுப்பினா் மட்டும் கூட்டரங்கிற்கு வந்தாா். மற்ற உறுப்பினா்கள் கூட்டரங்கிற்குள் கைப்பேசி கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி கூட்டரங்கிற்குள் செல்லாமல் காலதாமதம் செய்து வந்தனா்.

பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பின் கூட்டரங்கில் இருந்து வெளியே வந்த நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், 7 உறுப்பினா்கள் வந்தால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஆனால், ஒருவா் மட்டுமே வந்ததால் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறினாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸாா் நகராட்சி அலுவலகம் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

ஆனைமலை ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க