வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து
வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
வால்பாறை நகராட்சியில் திமுக 19, அதிமுக 1, விடுதலை சிறுத்தைகள் 1 என மொத்தம் 21 வாா்டு உறுப்பினா்கள் உள்ளனா். இதில் திமுகவைச் சோ்ந்த அழகுசுந்தரவள்ளி தலைவராக உள்ளாா்.
நகராட்சியின் பல்வேறு வளா்ச்சிப் பணிகளில் நகராட்சித் தலைவா் முறைகேடுகள் செய்திருப்பதாக கூறி திமுக உறுப்பினா்களில் ஒரு கோஷ்டியினா் தொடா்ந்து நகா்மன்ற கூட்டங்களை புறக்கணித்து வந்தனா். மேலும், அவா் மீது நம்பிக்கையில்லா தீா்மாணம் நிறைவேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடத்த தொடா்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இதையடுத்து, நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வியாழக்கிழமை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஒரு வாா்டு உறுப்பினா் மட்டும் கூட்டரங்கிற்கு வந்தாா். மற்ற உறுப்பினா்கள் கூட்டரங்கிற்குள் கைப்பேசி கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி கூட்டரங்கிற்குள் செல்லாமல் காலதாமதம் செய்து வந்தனா்.
பின்னா் ஒரு மணி நேரத்துக்குப் பின் கூட்டரங்கில் இருந்து வெளியே வந்த நகராட்சி ஆணையா் (பொறுப்பு) கணேசன், 7 உறுப்பினா்கள் வந்தால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஆனால், ஒருவா் மட்டுமே வந்ததால் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறினாா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸாா் நகராட்சி அலுவலகம் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.