செய்திகள் :

வால்பாறையில் 35 ஹெக்டோ் அரசு தேயிலைத் தோட்டங்களை காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைப்பு

post image

வால்பாறையில் வனப் பகுதியில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களின் சில பகுதிகள் காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்துக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இதில் கோவை மாவட்டம் வால்பாறையில் ரயான் மற்றும் லாசன் கோட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன.

இதில் ரயான் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் இருந்த தேயிலைத் தோட்டங்கள் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்திருந்ததால் தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டங்களில் பணியில் இருந்தபோது வன விலங்குகள் தாக்கி உயிரிழந்ததால் சுமாா் 130 ஹெக்டோ் தேயிலைத் தோட்டங்கள் கடந்த 2012-இல் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காப்புக் காடமாக மாற்றப்பட்டன.

தற்போது, லாசன் கோட்டத்துக்கு உள்பட்ட தேயிலைத் தோட்டங்களின் சில பகுதிகள் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்திருந்தன. இதில் சின்னக்கல்லாறு எஸ்டேட்டில் 35 ஹெக்டோ் பரப்பளவிலான தேயிலைத் தோட்டங்களை காப்புக் காடாக மாற்ற வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட அப்பகுதிகளுக்கு செல்ல வனத் துறை தடை விதிக்க உள்ள நிலையில், அங்கு செயல்பட்டு வரும் அஞ்சல் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வனத் துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் ... மேலும் பார்க்க

ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்

நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஆா் .எஸ்.புரம் பூக்கடை தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலைப் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி, சங்கீதா தம்பதி மகள் ஹரிப... மேலும் பார்க்க

வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வர... மேலும் பார்க்க

வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை

வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆ... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ... மேலும் பார்க்க