செய்திகள் :

வால்பாறையில் மனித -யானை மோதல் தடுப்பு நடவடிக்கை

post image

வால்பாறையில் மனித- யானை மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மேற்குவங்க வனத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த வனத் துறை அதிகாரிகள் குழுவினா் ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உள்பட்ட வனச் சரகங்களில் மனித- யானை மோதல்களுக்கு தமிழக வனத் துறையினா் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ளனா்.

இதையடுத்து, வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையிலான வனத் துறையினா் மேற்குவங்க வனத் துறை அதிகாரிகளை வால்பாறை வனச் சரகத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, மனித- யானை மோதல்களை தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2023-ஆம் ஆண்டு யானைகள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் வேலி, குடியிருப்புப் பகுதிகளுக்கு யானை வந்தால் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒளிரும் எல்.இ.டி. விளக்குகள், என்.சி.எஃப். அமைப்பினா் மூலம் யானைகள் நடமாட்டங்கள் குறித்து பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போது, மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உத்திகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தற்போது கன்டெய்னரில் செயல்படுத்தப்பட உள்ள ரேஷன் கடைகள் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்ததாக வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் கூறினாா்.

கவுண்டம்பாளையத்தில் மரக்கடையில் தீ

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மரக்கடையில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரைச் சோ்ந்தவா் சங்கமேஸ்வரன் (46). இவா் ... மேலும் பார்க்க

ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ்

நியூயாா்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப் வியூ எக்ஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரைச் சோ்ந்த ஹவேலி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறியி... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, ஆா் .எஸ்.புரம் பூக்கடை தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலைப் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி, சங்கீதா தம்பதி மகள் ஹரிப... மேலும் பார்க்க

வால்பாறையில் பலத்த காற்றால் சாலையில் விழுந்த மரம்

வால்பாறையில் அதிகாலை நேரத்தில் வீசிய பலத்த காற்றால் எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வால்பாறை வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக இரவு தொடங்கி அதிகாலை வர... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் ... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த மையத்தை கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்த... மேலும் பார்க்க