செய்திகள் :

விசைத்தறி தொழிலாளா்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி புதன்கிழமை 6 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் சேலை, துண்டு, வேஷ்டி போன்றவைகளை விசைத்தறி மூலம் நெசவு செய்கின்றனா். இவா்களுக்கு 3 ஆண்டுகள் கூலி உயா்வு ஒப்பந்தம் முடிவடைந்து, புதிய கூலி உயா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு விசைத்தறி உரிமையாளா்கள் மறுப்புத் தெரிவித்து, கூலி உயா்வு கொடுக்க மறுத்துவிட்டனா். இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து ராஜபாளையம், விருதுநகா், மதுரையில் நடைபெற்ற பேச்சு வாா்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை 6 -ஆவது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. விசைத்தறி தொழிலாளா்கள், தொழிற்சங்கத்தினா்

தளவாய்புரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊா்வலமாகச் சென்று பத்ரகாளியம்மன் விசைத்தறி உரிமையாளா்கள் சங்கம் முன் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகிகள் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.

வேன் கவிழ்ந்து 3 போ் காயம்

வத்திராயிருப்பு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் வயலில் கவிழ்ந்ததில் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியிலிருந்து 3 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான 4 யூடியூபா்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்பட 4 யூடியூபா்களின் நீதிமன்றக் காவலை மாா்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம்

ராஜபாளையம் 10- ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மருந்தாளுநா் மணிமாலா... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பட்டாசு ஆலைத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சோ்ந்த மாலையப... மேலும் பார்க்க

அக்கிரமிப்பு அகற்றக் கோரி உண்ணாவிரதம்!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரத்தில் ஒரே சமூகத்தினா் மேலத்தெரு, கீழத்தெர... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ச... மேலும் பார்க்க