செய்திகள் :

விதி மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், செண்பகம்பேட்டை பகுதியில் விதியை மீறி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த இளங்கோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

சிவகங்கை மாவட்டம், செண்பகம்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடி புதுக்கோட்டை மாவட்டம், லெம்பலக்குடி சுங்கச்சாவடியிலிருந்து 23 கி.மீ.தொலைவுக்குள் அமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விதியை மீறி அமைக்கப்பட்ட செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்றக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். விசாரணை நடத்திய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி, லெம்பலக்குடி சுங்கச்சாவடியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யவும், செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்றவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், எம்.ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை ஆகிய 2 பகுதிகளிலும் உள்ள சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை எண் என்ஹெச் 36-இல் வருகின்றன. சுங்கச்சாவடியை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதிகளுக்கு உள்பட்டு முடிவு செய்ய வேண்டும். லெம்பலக்குடி சுங்கச்சாவடி கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி கடந்த 2017-ஆம் ஆண்டுதான் அமைக்கப்பட்டது. 2-ஆவது அமைக்கப்பட்ட செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியே விதி முறைகளை மீறி அமைக்கப்பட்டது.

எனவே, இந்த வழக்கில் தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்!

வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.மதுரையில் மாவட்ட தோ்தல் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா... மேலும் பார்க்க

ஓராண்டில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் 15 லட்சம் பயணிகள்

ஓராண்டில் 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் மதுரை விமான நிலையத்தில் நாள்தோ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு 2 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா்!

மேலூா் அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிரானைட் அதிபா் கோபாலகிருஷ்னன், தமிழ்ச்செல்வி தம்பதியா் தங்களது 2 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கினா். கீழையூரிலுள்ள அ... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது

தொகுதி மறுவரையறை தொடா்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா். மதுரையில்... மேலும் பார்க்க

அ.வல்லாளபட்டியில் மாசி களரி திருவிழா சாமியாட்டம்

மேலூா் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி சிலிப்பிபட்டியில் அமைந்துள்ள திருமலைசுவாமி, கரடி கருப்பணசுவாமி கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சாமியாட்டம் நடைபெற்றது. இந்தக் கோயில்களில் மாசி களரித... மேலும் பார்க்க

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இ... மேலும் பார்க்க