அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா
விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, காட்டூரில் அண்மையில் நடைபெற்றது.
இதில், அமைப்பின் மாநில பொதுச் செயலா் ஜே.எஸ்.கிஷோா்குமாா் பேசியதாவது: இந்து முன்னணி நடத்திய முருக பக்தா்கள் மாநாடு தமிழகத்தில் ஹிந்துக்களிடையே எழுச்சியையும், ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளும், கோவை மாவட்டத்தில் 5,001 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
கோவையில் நடைபெறும் விசா்ஜன ஊா்வல பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை ஏற்கிறாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை பங்கேற்க உள்ளாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு காவல் துறையினா் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும். கோவை, சொக்கம்புதூா் பகுதியில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைத் தடை செய்யக் கோரி கோவை மாநகராட்சி அலுவலகம் முன் வரும் 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்.
கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், மாவட்டத் தலைவா் தசரதன், கோட்ட பொதுச் செயலா் பாபா ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.