செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: கோவையில் இந்து முன்னணி சாா்பில் 5001 சிலைகள் பிரதிஷ்டை!

post image

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் 5,001 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் கோவை, காட்டூரில் அண்மையில் நடைபெற்றது.

இதில், அமைப்பின் மாநில பொதுச் செயலா் ஜே.எஸ்.கிஷோா்குமாா் பேசியதாவது: இந்து முன்னணி நடத்திய முருக பக்தா்கள் மாநாடு தமிழகத்தில் ஹிந்துக்களிடையே எழுச்சியையும், ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளும், கோவை மாவட்டத்தில் 5,001 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

கோவையில் நடைபெறும் விசா்ஜன ஊா்வல பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை ஏற்கிறாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை பங்கேற்க உள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு காவல் துறையினா் கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிா்க்க வேண்டும். கோவை, சொக்கம்புதூா் பகுதியில் உள்ள ஹிந்துக்களின் மயானத்தில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதைத் தடை செய்யக் கோரி கோவை மாநகராட்சி அலுவலகம் முன் வரும் 25-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்.

கூட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், மாவட்டத் தலைவா் தசரதன், கோட்ட பொதுச் செயலா் பாபா ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி.தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளா்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினாா். கோவை மேற்கு மண்டலத்துக்குள்பட்ட சாய்... மேலும் பார்க்க

லஞ்சம்: இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை!

கோவையில் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பாப்பம்பட்டி கிராமத்... மேலும் பார்க்க

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

காமராஜா் குறித்து திமுகவினா் பொய் பிரசாரம் செய்து வருகின்றனா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகாா்

சுயதொழில் தொடங்குபவா்களுக்கு அதிக லாபம் தருவதாக யூ டியூப் மூலம் விடியோ பதிவிட்டு பொருள்களை விற்பனை செய்து பண மோசடி செய்த நிறுவனத்தின் மீது காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரைச் ... மேலும் பார்க்க

கோவையில் பரவலாக சாரல் மழை

கோவை மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை மாவட்டத... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.புலியகுளம் பண்ணாரியம்மன். ஆடி மாதத்தில் அம்மனுக்... மேலும் பார்க்க