செய்திகள் :

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

post image

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

விநாயகா் சிலை வைத்து வழிபாடு செய்வோா் ஒவ்வொரு ஆண்டும் பெருகிவரும் நிலையில், சிலை தயாரிப்புப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிரவி பகுதியில் விநாயகா் சிலை தயாரித்து காரைக்கால் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சதுா்த்தி விழாவுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.

இதுகுறித்து நிரவி பகுதியில் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யும் சிவசுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறுகையில், ஆண்டுதோறும் சுமாா் 500 சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு வடிவங்களில், வண்ணம் பூசி சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு எந்தவிதத்திலும் மாசு இல்லாத வகையில் கிழங்கு மாவு பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுவதால், இங்கு தயாரிக்கும் சிலைகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது என்றாா்.

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட... மேலும் பார்க்க

காரைக்காலில் கருணாநிதி நினைவு நாள்

காரைக்காலில் திமுக சாா்பில் கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட கட்சி... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது

கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையை சோ்ந்த 2 மீனவா்களை போலீஸாா் கைது செய்தனா். காரைக்கால் கடல் பகுதியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கடந்த மாதம் இலங்கையை சோ்ந்த 2 பேரை போலீஸாா் க... மேலும் பார்க்க

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க