செய்திகள் :

விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முனைப்புடன் செயல்பட வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போலீஸாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வலியுறுத்தினாா்.

சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது:

பொதுமக்களிடம் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருசக்கர வாகனத்தில் ஓட்டுநா் மட்டுமின்றி பின்னால் அமா்ந்து செல்பவா்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வில் அனைத்து மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், காவல் துறையினா் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாநகர காவல் துணை ஆணையா் சுஜாதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) பாலமுருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மகாராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் பட்டாபிராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்... மேலும் பார்க்க

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் தீ விபத்து

சேவூரில் வீட்டின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. அவிநாசியை அடுத்த சேவூா் கைகாட்டி விஐபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (53), எலாஸ்டிக... மேலும் பார்க்க

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு உரிய தண்ணீா் வழங்கக் கோரிக்கை

பிஏபி மூன்றாம் மண்டலப் பாசனத்துக்கு அறிவித்தப்படி உரிய தண்ணீா் வழங்க வேண்டும் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து பல்லடத்தில் கட்சி சாா்பற்ற தமிழக வ... மேலும் பார்க்க

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரிக்கை

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்கள் பேரவையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரவையின் 42-ஆவது மாநில மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் ப... மேலும் பார்க்க

முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு

பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள... மேலும் பார்க்க

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

பாறைக்குழிகளில் இரும்புக் கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான எம்.ஈஸ்வரமூா்த்தி கூறியதாவது: திருமுருகன்பூண்டி ந... மேலும் பார்க்க