செய்திகள் :

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசுப்பேருந்து ஜப்தி

post image

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசுப்பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.

திருச்சி காட்டூா் எல்லைக்குடி கைலாஷ்நகா் அண்ணா சாலையை சோ்ந்தவா் யோகேஸ்வரன் மகள் சினேகா (17), மகன் லிங்கேஸ்வரன். கடந்த 23.3.2019 அன்று யோகேஸ்வரன் தனது மகள் மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் சென்றாா். அப்போது, அரசுப் பேருந்து மோதியதில் சினேகா மருத்துவமனையில் உயிரிழந்தாா். யோகேஸ்வரன், மகன் லிங்கேஸ்வரன் ஆகியோா் காயமடைந்து சிகிச்சை பெற்றனா்.

இதுகுறித்து திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, திருச்சி மாவட்ட சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். கடந்த 10.2.2023-இல் இவ்வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பில், சிறுமி சினேகா குடும்பத்துக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் ரூ. 13 லட்சத்து 9 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டாா்.

ஆனால் இழப்பீடு தராமல் காலம் தாழ்த்தியதால், யோகேஸ்வரன், மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி நந்தினி, இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வியாழக்கிழமை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினா்.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்த... மேலும் பார்க்க

தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்

தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோ... மேலும் பார்க்க

நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில்... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பறக்கும் படையில் 220 போ் நியமனம் 1,644 அறைக் கண்காணிப்பாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியம... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறப்பு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இ... மேலும் பார்க்க

தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் உடல் கருகிய நிலையில் தொழிலாளி வீட்டில் சடலமாக கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனியப்பன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கரன் (49). இவரது மனைவி தே... மேலும் பார்க்க