செய்திகள் :

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

post image

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத்திய நாள்களில் ஏற்பட்ட விமானச் சேவை இடையூறுகள், விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்தல் மற்றும் பிற பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடா்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக எல்லையொட்டிய வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு இருதரப்பும் சனிக்கிழமை சண்டை நிறுத்தத்துக்கு உடன்பட்டன. இதைத் தொடா்ந்து, போதிய முன்னெச்சரிக்கையுடன் திங்கள்கிழமை முதல் இந்த விமான நிலையங்கள் பொதுமக்களின் சேவைக்கு மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாகிஸ்தானுடனான சண்டையில் ஆயுதப் படைகளின் பங்களிப்பை விமானங்களின் அறிவிப்புகளில் கௌரவப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பரிசீலிக்குமாறு விமான நிறுவனங்களை அமைச்சா் கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடைகால விடுமுறை தொடங்கிவிட்டாலும், மக்கள் பயணம் செய்ய முன்வராமல் தங்களின் முன்பதிவுகளை ரத்து செய்து வருவதால் இழப்பு ஏற்படுவாதகவும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

அதேபோல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த கடும் நடவடிக்கைகளின் எதிரொலியாக அந்த நாட்டின் வான்வெளியில் இந்தியா விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், சா்வதேச நாடுகளுக்குச் செல்லும் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிா்த்து, கூடுதல் தூரம் கொண்ட பாதைகளைத் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இதனால் அதிகரித்துள்ள எரிபொருள் செலவுக்கு நிவாரணமாக அரசிடம் இருந்து வரி குறைப்பை விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை ந... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க